Saturday, September 3, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 61

பெரும்அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த 
மக்கள்பேறு அல்ல பிற.

The world no higher bliss bestows
Than children virtuous and wise.

MEANING:

இல்லறத்தை ஒரு தவம் போல் இயற்றி, அறிவுள்ள மக்களைப் பெறுவதே, பெறற்கரிய பேறாகும்.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கள் பெறின்.

No evil comes and no blemish;
Noble sons bring all we wish.
 
MEANING:

ஓரு நற்பண்புள்ள ஞானக்குழந்தையைப் பிள்ளையாய்ப் பெற்றால், ஏழு தலைமுறைக்குப் பழியும் பாவமும் அணுகாது.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

Children are one's wealth indeed
Their wealth is measured by their deed.

MEANING:

குழந்தைகள், நமக்குச் சொந்தமான உடைமை, அவர்களைப் போற்ற வேண்டியது நம் கடமை. அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் வினை அவர்களை ஆளுமாறு விடுவதே அறிவுடைமை.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

The food is more than nectar sweet
In which one's children hand's insert.

MEANING:

குழந்தைகள் தம் பிஞ்சுக் கைகளால் துழாவிய உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட இனிமை தருவதாம்.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 65

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர் 
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

Children's touch delights the body
Sweet to ears are their words lovely.

MEANING:

பிள்ளைகளை அன்புடன் தழுவிக் கொஞ்சுவதே உடலுக்கு இன்பம்; அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்பதோ செவிக்கு இன்பம்.




No comments:

Post a Comment