Good to read

Some of the words written in a book or narrated by some people attract us a lot!! Here in this page, I would like to share some of the interesting stories, speeches, jokes that has attracted me a lot..

படித்ததில் பிடித்தது....

'வாலி'யைத் தூக்கினால்...

"உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு வாலி பலமுறை பாட்டு எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை. பொறுமையிழந்த எம்.ஜி.ஆர், "படத்திலிருந்து 'வாலி'யை தூக்கிவிட வேண்டியதுதான்" என்றார்.

உடனே வாலி, என் பெயரை எடுத்துவிட்டு உங்கள் படம் வெளிவந்து விடுமா? அப்படி வரவேண்டும் என்றால் "உலகம் சுற்றும் பன்" என்று தான் வர முடியும் என்றார் வாலி.

இதைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார். பின்னர் வாலி பாட்டெழுத படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


கவிஞர் வாலி நினைவு நாள் உரையில் மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம் பேசியதிலிருந்து.. 

(தினமணி சிறுவர் மணியில் 3.9.2016 அன்று படித்ததில் பிடித்தது.)

No comments:

Post a Comment